இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தில் கூலி உயர்வு, போனஸ் உயர்வு உள்ளிட்ட மூன்று அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜனவரி 30-ஆம் தேதி முதல் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எட்டாம் நாளான திங்களன்று செட்டியார்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன் கஞ்சித்தொட்டி திறக்கப்பட்டது. தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம், கைத்தறி நெசவாளர் சங்க மாவட்டச் செயலாளர் ராமர், மகாலட்சுமி, ராஜ்(சிஐடியு), அய்யனார் (ஏடிசி), குருசாமி (சிபிஎம்), ஆர்.பி.முத்துமாரி, சமுத்திரம், கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.