districts

img

மாற்றுத்திறனாளிகள் சங்கம் நடத்திய பொங்கல் விளையாட்டு விழா

திருச்சுழி, ஜன.19- விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள நார்த்தம்பட்டியில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்  திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக் கான சங்கத்தின் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் பி.ஜெயராணி தலைமை வகித்தார். ஒன்  றிய பொருளாளர் ஆர்.சுப்பா ராஜ் வரவேற்புரையாற்றி னார். விளையாட்டு போட்டி களை மாவட்டத் தலைவர் என்.டி.நடராஜன் துவக்கி வைத்தார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்  கத்தின் மாவட்டத் தலை வர் எஸ்.பூங்கோதை சிறப்பு ரையாற்றினார்.  மாற்றுத் திற னாளிகள் சங்க மாவட்ட செய லாளர் கே.நாகராஜ், மாவட்ட பொருளாளர் பி.அன்புச் செல்வன்,  ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் பூமி நாதன், மாவட்ட துணைத் தலைவர் ஏ.குமரேசன் ஆகி யோர் வெற்றி பெற்றவர் களுக்கு பரிசுகளை வழங்கி னர். முடிவில் பானுப்பிரியா நன்றி கூறினார். முன்ன தாக மைதானத்தில் சமத்து வப் பொங்கல் விழா நடை பெற்றது.