உள்ளூர் கொலையாளிகளை பிடிப்பதில் போலீசார் தாமதம் விரைந்து கைது செய்யக்கோரி மறியல்
போடி, ஜூலை 31- தேனி மாவட்டம், போடியில் உள்ளூர் கொலையாளி களை பிடிப்பதில் போலீசார் தாமதம் செய்வதைக் கண்டித் தும் தனியார் தங்கும் விடுதி உரிமையாளரை கொன்ற கொலையாளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும் ஞாயிறன்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போடியில் சனிக்கிழமையன்று பட்டப்பகலில் தலைமை தபால் நிலையம் அருகே முன்னாள் ராணுவ வீரரும், தனியார் தங்கும் விடுதி உரிமையாளருமான ராதா கிருஷ்ணன் (70) என்பவர் வெட்டி கொலை செய்யப் பட்டார். குற்றவாளிகளை போலீசார் கைது செய்யாததை கண்டித்தும் விரைந்து கைது செய்யக்கோரியும் ராதா கிருஷ்ணனின் உறவினர்கள் ஞாயிறன்று போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த போடி டி.எஸ்.பி சுரேஷ் மற்றும் போலீ சார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க தற்போது 6 தனிப்படை கள் அமைக்கப்பட்டுள்ளன. போடி மேலச்சொக்கநாத புரத்தை சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர் மாரி முத்து என்பவருக்கும் இடப்பிரச்சனை தொடர்பான முன் விரோதம் இருந்துள்ளது. இதன் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஞாயிறன்று பிரேதப் பரிசோதனைக்கு பின் ராதாகிருஷ்ணன் உடல் போடி வினோபாஜி காலனியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வாலிபர் சங்க பரமக்குடி தாலுகா மாநாடு
இராமநாதபுரம், ஜூலை 31- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பரமக்குடி தாலுகா மாநாடு தாலுகா துணைத்தலைவர் ரஞ்சித் தலை மையில் நடைபெற்றது. தாலுகாக்குழு உறுப்பினர் ராஜேஷ் வரவேற்றார். தாலுகா உறுப்பினர் ஹரிஹரன் அஞ்சலி தீர்மானம் வாசித் தார். மாவட்ட தலைவர் மாரிமுத்து துவக்கி வைத்துப் பேசினார். தாலுகா செயலாளர் முனியசாமி வேலை யறிக்கை சமர்ப்பித்தார் .சிஐடியு மாவட்ட துணைச் செய லாளர் ராஜா வாழ்த்துரை வழங்கினார். மாவட்டச் செய லாளர் தட்சிணாமூர்த்தி நிறைவுரையாற்றினார். மாநாட் டில் தாலுகா தலைவராக ரஞ்சித்,செயலாளராக முனிய சாமி, துணைத் தலைவர்களாக அரிஹரன்,ரவி , துணைச் செயலாளர்களாக முத்துக்குமார், சேகர், பொருளாள ராக முருகானந்தம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மணிகண்டன் நன்றி கூறினார். கமுதக்குடியில் மூடப்பட்ட ஒன்றிய அரசின் பஞ்சாலை யை மீண்டும் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.
ரூ.23 ஆயிரம் கையாடல் அஞ்சலக ஊழியர் பணிநீக்கம்
விருதுநகர், ஜூலை 31- விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்த வர் சுந்தரமூர்த்தி (39). இவர் இனாம் ரெட்டியப்பட்டி அஞ்சல் அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அவர் பணியில் இருந்த போது வாடிக்கையாளரின் பணம் ரூ. 23 ஆயிரத்தை கையாடல் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். முடிவில், சுந்தர மூர்த்தியை பணி நீக்கம் செய்தனர். இந்த நிலையில் கையாடல் செய்தது தொடர்பாக சுந்தரமூர்த்தி மீது விருதுநகர் அஞ்சல் துறை உப கோட்ட ஆய்வாளர் இராமசாமி சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னேற்பாடுகள் குறித்து சார் ஆட்சியர் ஆய்வு
திருவில்லிபுத்தூர், ஜூலை 31- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்ட விழா ஏற்பாடு குறித்து சிவகாசி சார் ஆட்சியர் பிரித்திவிராஜ் ஞாயிறன்று நேரடியாக ஆய்வு செய்தார். ஆய்வின் போது கோயில் செயல் அலுவலர் முத்து ராஜா, வட்டாட்சியர் ராமசுப்ரமணியன், நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், நகர காவல் ஆய்வாளர் கீதா, நகர தீய ணைப்பு அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.