districts

img

கோம்பையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

தேனி, ஜன.30- அண்ணல் மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் பாளையம் ஒன்றியம் கோம்பையில் மத நல்லிணக்க, மத வெறி எதிர்ப்பு  உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு சி.மு இப்ராகிம் தலைமை வகித்தார். சிபிஎம் ஏரியா செயலாளர் எஸ். சஞ்சிவி குமார், ஏரியாக்குழு உறுப்பினர் சீனிவாசன், லட்சுமணன், மனோ கரன், சுருளி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் எல்.ஆர்.சங்கரசுப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  நிறைவாக மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் கே.ராஜப்பன், மத ஒற்றுமைக்கு ஆர்எஸ்எஸ் போன்ற மதவெறி இந்துத்துவா சக்திகளால் ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து உரையாற்றினார்.