முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல் தோட்டனூத்து கிராமத்தில் இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஆயிரம் மரக்கன்றுகளை நடும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி துவக்கி வைத்து, முகாமில் கட்டப்பட்டு வரும் வீடுகளை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சியர் விசாகன், மாவட்டக் காவல்த்துறைக் கண்காணிப்பாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.