சிவகங்கை, ஜூன் 11- சிவகங்கை மாவட்டத்தில், மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் 23.06.2023 அன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. சிவகங்கை மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் ஜூன் 7 முதல் 10 ஆம் தேதி வரை சிவகங்கை மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பெறப்பட்டது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான ஜூன் 10 அன்று ஊரகப்பகுதியில்; 9-வேட்பு மனுக் களும், நகர்ப்புற பகுதியில் இருந்து 7- வேட்பு மனுக் களும் பெறப்பட்டுள்ளது மொத்தம் 16-வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனைக்காக 12.06.2023 அன்று முற்பகல் 11 மணிக்கு எடுத்துக் கொள் ளப்படும். வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான அறி விப்பை வேட்பாளரோ அல்லது அவரால் குறிப்பாக எழுத்துப்பூர்வமாக அதிகாரம் அளித்துள்ள அவரது முன்மொழிபவரால், தேர்தல் நடத்தும் அலுவலர் -உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 14.06.2023 அன்று பிற்பகல் 3 மணி வரை சிவகங்கை மாவட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வழங்கலாம். தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாக்கு எண்ணுதல் நடைபெற்று முடிவுற்ற நாளான ஜூன் 23 அன்றே வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப் பின் பதவி காலம் முடியும் வரை பதவி வகிப்பார்கள் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.