நத்தம், ஏப்.12- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி செந்துறை அருகே உள்ளது திருநூத்துபட்டி கிராமம். இங்கு குடிதண்ணீர் தொட்டி சேதமடைந்துள்ளது. புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய தொட்டியை இடித்து விட்டு புதிய தொட்டியை உடனடியாக கட்ட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் அந்த வழியாக வந்த பேருந்தை மறித்து திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் மலரவன்,காவல் ஆய்வாளர் தங்கமுனியசாமி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்து விரைவில் புதிய தொட்டிகட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.