மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மோடியின் புகைப்படத்தை
வைக்க கோரி பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று பொதுமக்கள் தங்களுடைய குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுக்கும் நாளில் பிரதமர் மோடியின் படத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளிடம் மனு வாங்க சென்ற இடத்தில் கூட்டமாகச் சென்று மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு மோடியின் உருவப்படம் மற்றும் சுத்தியல் மற்றும் ஆணிகளை கொடுத்து உடனடியாக பிரமர் மோடி படத்தை ஆட்சியர் அலுவலகத்தில் வைக்க வேண்டும் என்று மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் வந்தவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் அங்கிருந்த மாற்றுத்திறனாளிகள் மனுக்களை கொடுக்க முடியாமலும் வெளியே செல்ல முடியாமலும் தவித்து வந்தாதல் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த சிலர் கூறுகையில் மக்கள் அன்றாடம் வீடுகளில் பயன்படுத்தும் கேஸ் மற்றும் இருச்சக்கர வாகனம், லாரி, வேன்களுக்கு பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலை என்பது தினசரி கடுமையாக உயர்ந்து வருகிறது அதைப் பற்றியெல்லாம் இவர்கள் பேசுவதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை இதற்கு காரணமாக உள்ள மோடி அவர்கள் படத்தை இங்கே வைப்பதற்கு வந்து விட்டார்கள் என்று காதுபட பேசிச் சென்றார்கள்.
மேலும், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இதுபோல் பிரதமர் படத்தை வைக்க வேண்டும் என்று பெரிய அளவிற்கு பிரச்சினை செய்யாத பாஜகவினர் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இதுபோன்ற சர்ச்சைகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலகங்களில் ஏற்படுத்தி வருகின்றனர்.