சென்னை, பிப்.15 உள்ளாட்சித்தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்க ளுக்கு மனு நீதி அறக் கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து அந்த அறக்கட்டளையின் தலை வர் மாணிக்கம் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் “கோவையைச் சேர்ந்த எங்களது மனு நீதி அறக்கட்டளை, கடந்த பல ஆண்டுகளாக மக்க ளிடையே நல்லாட்சி முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளைச் செய்து வருகிறது. அந்த வகையில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள், மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று கூறி யுள்ளார். பொதுமக்கள் அரசு அலு வலகங்களைத் தேடிச் செல்லும் நிலையை மாற்றி, உள்ளாட்சிகளுக்கு தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளின் இல்ல த்திற்குச் சென்றால் மக்கள் பிரதிநிதி அல்லது அவரது உதவியாளர் நேரில் வந்து மனுக்களைப் பெற வேண்டும். பிறகு அதன் மீது உடன் நடவடிக்கை எடுத்து அந்தத் தகவல்களை அவ ருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.