இராமநாதபுரம், ஆக.13- இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் வாலிநோக்கம் கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் நிலையில் இன்று வரை வீட்டுமனை பட்டா வழங்காததால் வீட்டுமனை பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலாடி கிழக்கு தாலுகாச் செயலாளர் எம். அம்ஜத்கான் தலைமையில் கடலாடி வட்டாட்சியர் முருகேசனிடம் மனு அளித்த னர். இதில் கடலாடி கிழக்கு தாலுகா குழு உறுப்பினர் கே.பச்சைமால், டி.நம்புராஜன், எஸ்.ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.