விருதுநகர், ஏப்.24- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ளது சின்னஓடைப்பட்டி கிராமம். இங்குள்ள எம்.ஜி.ஆர். காலனிக்குச் செல்ல நடைபாதையின்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், “சாத்தூர் வட்டத்திற்கு உட்பட்டது சின்ன ஓடைப்பட்டி கிராமம். இங்குள்ள எம்.ஜி.ஆர்.காலனியில் 35 வீடுகளில் 220 பேர் குடியிருந்து வருகிறோம். கால னிக்குச் செல்வதற்கு நத்தம் புல எண் : 74/2, 74/30 ஆகும். நாங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக பாதையாக பயன்படுத்தி வந்த இந்த இடத்தை சில தனிநபர்கள் ஆக்கி ரமித்து விட்டனர். ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பலமுறை புகாரளித்தும் நட வடிக்கை இல்லை. இதனால், காலனியில் இயற்கை எய்தியவர்களை தூக்கிச் செல்லக் கூட வழியில்லை. ஆக்கரமிப்பு களை அகற்றி நடைபாதையை மீட்டுத் தர வேண்டுமென தெரிவித்துள்ளனர்.