districts

மதுரை முக்கிய செய்திகள்

ரத்து செய்த பட்டாவை மீண்டும்  வழங்கக்கோரி ஜமாபந்தியில் மனு

சிவகங்கை, ஜூன் 2- சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியில் நடை பெற்ற ஜமாபந்தியில் கீழா யூர் காலனியில் குடியிருந்து வரும் மக்களுக்கு சுமார் 200  வீடுகளுக்கு மேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு  பட்டா ரத்து செய்யப்பட்டுள் ளது. இதனால் இந்த மக்கள் எந்த அரசு உதவியும் பெற முடியாமலும் வீட்டு வரி செலுத்த முடியாமலும் மின் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முறையிடப் பட்டது. ஜமாபந்தி அலு வலர் இதுபற்றி உடனடி யாக மாவட்ட ஆட்சியர் கவ னத்திற்கு கொண்டு சென்று ஒரு வாரத்தில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு

தேனி, ஜூன் 2- ஆண்டிபட்டியில் போலி யான ஆவணம் தயாரித்து கிரைய பத்திர பதிவு செய் ததாக சார்பதிவாளர் உட்பட 5 பேர் மீது சைபர் கிரைம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . தேனி மாவட்டம், ஆண்டி பட்டியை சேர்ந்த குருசாமி  மகன் சுப்பிரமணியன் (61).இவரது குடும்பத்திற்கு சொந்தமான 2 ஏக்கர் 40  சென்ட் நிலம் பாகப்பிரி வினை மூலம் கிடைத்து அனு பவத்தில் இருந்து வருகிறது. இணையதளத்தில் வில்லங் கம் பார்த்த போது சுப்ரமணி யனின் சகோதரர் கண்ணன் என்பவர் தவறான தகவல்  களை அளித்து தங்கவேல் என்பவருக்கு பொது அதி கார ஆவணம் எழுதிக் கொடுத்து பல்வேறு பேர்களுக்கு விற்  பனை செய்துள்ளார் இதற்கு  சார் பதிவாளர் ,ஆவண எழுத்  தர் துணை போனதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரி டம் புகார் அளித்தார் .அதன் பேரில் விசாரணை நடத்திய சைபர் கிரைம் காவல் ஆய் வாளர் அங்கயற்கண்ணி, கண்ணன், சார் பதிவாளர் உஷா தேவி உள்ளிட்ட 4 பேர்  மீது வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்.

கார் மோதி  பூ வியாபாரி பலி

காரியாபட்டி, ஜூன் 2- காரியாபட்டி அருகே  கல்குறிச்சி 4 வழிச்சாலை யில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக் குள்ளானதில் பூ வியாபாரி உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம், காரியபாட்டி அரகே உள்ள  செவல்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(70). இவர் தோட்  டத்தில் விளையும் பூக்களை தனது இருசக்கர வாகனத் தில் கொண்டு சென்று அருப்  புக்கோட்டையில் விற்று வரு வது வழக்கம். இதேபோல்  இரு சக்கர வாகனத்தில் சென்ற போது, கல்குறிச்சி சமத்து வபுரம் அருகே சென்ற போது பின்னால் வந்த கார் மோதி யதில் சம்பவ இடத்திலேயே மகாலிங்கம் உயிரிழந்தார். 

பைக்கிலிருந்து தவறி விழுந்து முதியவர் பலி 

திருவில்லிபுத்தூர் ,ஜூன் 2-  திருவில்லிபுத்தூர் நகர் கூணங்குளம் தெற்கு தெருவில் வசிப்பவர் சுந்தரம் ( வயது 74 )இவர் திமுகவின் முக்கிய பிர முகர் ஆவார். இவர் உறவினரின் விஷேசத்திற்கு பைக்கில்  சென்றார். அத்திகுளம் அருகே உள்ள குப்பா மடம் பகுதியில்  அங்குள்ள கண்மாயில் நிலை தடுமாறி கீழே விழுந்து அதே  இடத்தில் உயிரிழந்தார். அவரது மகன் துரைப்பாண்டி பல  இடங்களில் தந்தையை தேடி உள்ளார். இந்த நிலையில் சம்பவ இடத்தில் சுந்தரம் உயிரிழந்த நிலையில் கிடப்பது குறித்து அறிந்து நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.