districts

2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே புறநகர் ரயில்களில் பயணிக்க அனுமதி

சென்னை, ஜன.10- சென்னை புறநகர் ரயில்களில் இரண்டு  டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட வர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்ற புதிய நடைமுறை திங்களன்று முதல் அமலுக்கு வந்தது. தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றி தழை காட்டியவர்களுக்கு மட்டும் பய ணச்சீட்டு வழங்கப்படுகிறது. இருப்பினும், ஒரு மாதத்திற்கு முன் முதல் தவணை  செலுத்தி இருப்போருக்கும் பயணச்சீட்டி னை ஊழியர்கள் வழங்கினர். அதே சமயம், இரண்டாம் தவணை செலுத்துவதற்கான காலக்கெடு வந்த பிறகும் தடுப்பூசி செலுத்தாமல் இருப்போ ரை திருப்பி அனுப்பினர். ரயில்களுக்கான மாதாந்திர பயண அட்டைகளில் பயணி யர் தடுப்பூசி செலுத்தியதற்கான எண்ணும் அச்சிட்டு வழங்கப்படுகிறது. ஏற்கனவே வாங்கிய பயண அட்டைகளை பயன்படுத்தி வருவோர் இரு தவணை தடுப்பூசிக் கான சான்றிதழை பயணத்தின்போது வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.