தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி காந்தி பூங்கா அருகில், பெரியார் நகர்வு புத்தகச் சந்தை தொடக்க விழா திங்கள்கிழமை, திராவிட கழக மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர் ஓய்வு ஆசிரியர் சி.வேலு வரவேற்றார். பேராவூரணி எம்.எல்.ஏ என்.அசோக்குமார் முதல் புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார். பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். திராவிடர் கழக மாவட்ட இளைஞரணி தலைவர் அ.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.