திண்டுக்கல், ஜுலை 13- காந்தியை இந்து மதம் என்றும், காந்தி என்ற இந்துவை கொன்ற கோட் சேவை இந்துத்துவா என்றும் நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற கருத்தரங்கில் பேராசிரியர் அருணன் கூறினார். திண்டுக்கல்லில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக சிறப்பு கருத்த ரங்கம் செவ்வாயன்று நடைபெற்றது. அமைப்பின் மாநிலத் தலைவர் அரு ணன் கருத்துரையாற்றினார். அவர் பேசுகையில், மதம் வேறு. மத வெறி சக்திகள் வேறு. இன்னும் குறிப் பாக சொல்ல வேண்டும் என்றால் இந்து மதம் என்பது வேறு. இந்துத்துவா என் பது வேறு. அதாவது இந்து என்றால் மகாத்மா காந்தி, இந்துத்துவா என்றால் கோட்சே அவ்வளவு தான். காந்தி இந்து தான். அந்த இந்துவை கொன்ற கோட்சே இந்துத்துவா. மத நம்பிக்கையாளர் களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய பிரச்சனை மதம் அல்ல. மத வெறி தான் நமது பிரச்சனை. பெரும் பான்மை இந்து மதத்திற்குள் இந்துத்து வாவாதிகள் மதவெறியை கட்ட மைக்கிறார்கள். இந்த மதவெறி சக்தி களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறினார். இக்கருத்தரங்கிற்கு மாவட்டத் தலைவர் டாக்டர் அமலாதேவி தலை மை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் கே.எஸ்.கணேசன் வரவேற்றார். திண்டுக்கல் மத நல்லிணக்கத்தின் சின் னம் என்ற தலைப்பில் கவிஞர் கதிர வன், அருட்தந்தை பிலிப் சுதாகர், முனை வர் ஸ்ரீபாலசுந்தரி ஆகியோர் பேசினர். தோழமைச் சங்க தலைவர்கள் இரா.வீரபாண்டி (திராவிடர் கழகம்), துரை சம்பத் (தந்தை பெரியார் திராவிடர் கழ கம்), நிக்கோலஸ் (கத்தோலிக்க சங்க திட்ட செயலாளர்), புலேந்திரன் (திரா விடர் இயக்க தமிழர் பேரவை), கே.ஆர். பாலாஜி(வாலிபர் சங்கம்), சொக்க மேளா (நாளந்தா பண்பாட்டு மையம்), முனைவர் க.மணிவண்ணன் (இலக்கி யக்களம்), ஏ.அரபுமுகமது (சிறு பான்மை மக்கள் நலக்குழு ) உள்பட பலர் கலந்து கொண்டனர். (ந.நி.)