விழுப்புரம், ஜூலை 7- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் சார்பில் ஜூலை 7 ஆம் தேதி (வியாழக் கிழமை) விழுப்புரத்தில் பொதுக்கூட்டம் நடை பெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் வி.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன் “மாற்றுத்திறனாளிகளின் நலன்களையும் உரிமைகளை பாதுகாக்க ஒன்றிய-மாநில அரசு களுக்கு எதிராக நடத்திய போராட்டங் களையும் அதிகாரிகளும், காவல் துறையினரும் நடத்திய தடியடி சம்பங் களையும் விளக்கமாக கூறினார். மாநிலச் செயலாளர் பி. ஜீவா, மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, மாவட்ட த் தலைவர் பி.முருகன், பொருளாளர் பி.உமா, மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்கே.முருகன், ஜி.ஜெயக்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.செல்வி, பி.முருகன், எம்.யுகந்தி எம்.முத்து வேல் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் இதில் கலந்து கொண்டனர்.