districts

img

மதுரையில் செங்கொடியின் வெற்றி நிச்சயம்! கலைக் குழுக்களிடம் ஆர்வத்தை வெளிப்படுத்திய மக்கள்

தேர்தல் பிரச்சாரம் புதன் கிழமை மாலை நிறைவு பெறும் நிலை யில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சிபிஎம் வேட்பா ளர் சு.வெங்கடேசனை ஆதரித்து நடை பெறும் பிரச்சாரக் களத்தில், திருவில்லி புத்தூர் புயல் கலைக்குழு, கன்னியாகுமரி முரசு கலைக்குழுவினர் மதுரை தொகு தியை கலக்கி வருகின்றனர்.  முரசு கலைக்குழுவில் 12 பேரும்,  புயல் கலைக்குழுவில் மரிய டேவிட் உள்ளிட்ட 10 பேரும் இடம் பெற்றுள்ள னர். இவர்கள்  செவ்வாய்க்கிழமை காலை வரை மதுரை தொகுதியில் 70 மையங்க ளில் பிரச்சாரம் செய்துள்ளனர்.

‘‘போக்குவரத்து நெரிசல் மிக்க நகர்ப் புறங்களில் 50 பேர் வரை கூடுகின்றனர். ஆங்காங்கே கடைகளில் நின்று நாங்கள் சொல்லும் செய்திகளை கேட்கின்றனர். கிராமப்புறங்களில் குறைந்தது 100-முதல் 150 பேர் வரை திரள்கின்றனர்’’ என் கின்றனர் கலைக்குழு கலைஞர்கள். முரசு கலைக்குழுவைச் சேர்ந்த ராஜேஷ் கூறுகையில், ‘‘பறையை தீயில் சூடேற்றும் நேரம் பத்து நிமிடம், தவிர கலை நிகழ்வு முடிந்து இளைப்பாறும் நேரம் பத்து நிமிடம். இந்த இருபது நிமி டங்களில், ‘‘அந்தப் பிரச்சனையை பற்றி நீங்கள் கூறவில்லையே’’ என்று  மக்கள் எங்களிடம் கேட்கின்றனர்.

சில கிராமங்க ளில் மோடி அரசு மக்களுக்கு எதிராகச் செய்த காரியங்களில் பல பிரச்சனைகளை விட்டு விட்டீர்களே எனக் கேட்டனர். விடுபட்ட பிரச்சனைகளை கூறினர். அடுத்தடுத்த கிராமங்களில் வாக்காளர் கள் கூறிய பிரச்சனைகளையும் எடுத்துக்  கூறினோம். எங்களது நிகழ்ச்சியைப் பாராட்டி அன்பளிப்பு அளித்த கிராமத்தின ரும் உள்ளனர். வேட்பாளர் சு.வெங்கடே சனை மக்கள் அறிந்து வைத்துள்ளனர்.  எனவே அவருடைய சின்னம் சுத்தியல், அரிவாள், நட்சத்திரம் என்பதை அழுத்தம் திருத்தமாக மக்கள் மனதில் பதியவைத்துள்ளோம்’’ என்றார்.

 புயல் கலைக்குழுவினரிடம் பேசிய போது, ‘‘இலவசப் பேருந்து, மகளிர் உத வித்தொகை திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. நாங்கள் பிரச்சா ரம் செய்த கிராமங்களில் முரண்பட்ட கருத்துகள் யாரும் எங்களிடம் தெரிவிக்க வில்லை. சு.வெங்கடேசனையும் சின்னத்தையும் மக்கள் அறிந்துள்ளனர். மதுரையில் செங்கொடியின் வெற்றி நிச்சயம்’’ என்றனர்.