districts

img

மதுரை வடக்குப்பகுதியில் முழுமையடையாத பாதாளச்சாக்கடை பணியால் மக்கள் அவதி

மதுரை, ஜூலை 22- ஸ்மார்ட் சிட்டி-யின் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதி களில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இந்த பணிகள் முழுமைடையாததால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதற்கு தீர்வுகோரி போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர்.  மதுரையின் வடக்குப்பகுதிகளில் விளாங்குடி, புதுவிளாங்குடி, சாந்திநகர், ரயிலார்நகர், அஞ்சல்நகர், கூடல்நகர், ஆனையூர், ஆனையூர் வீட்டுவசதி வாரி யக்குடியிருப்பு, ஆனந்த நகர், செல்லூர்-குலமங்களம் சாலை, எஸ்.ஆலங்குளம், அலமேலுநகர், திருப்பாலை, கண் ணேந்தல், நாராயணபுரம் உட்பட விரி வாக்கப்பகுதிகளிலும் தவிர இந்தப் பகுதிக ளுக்குள்ளேயே புது புதிதாய் முளைத்துள்ள நகர்களிலும் பாதாளச் சாக்கடைப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ஒரு இடத்தில் கூட பணி முழுமையடைய வில்லை. (பணி முழுமை பெற்றால் அந்தப் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்படும்.) 

குறிப்பாக மதுரை (கூடல்நகர்) வானொலி நிலையத்திலிருந்து ஆனையூர் அருகே உள்ள கோசாகுளத்தை சென்றடை வதற்கு மக்களுக்கு மாநகராட்சி தனிப் பயிற்சியளிக்க வேண்டும். அதிலும், ஆனையூர் பேருந்து நிலையத்திலிருந்து குமரன் நகர்-இந்திரா நகர் வழியாக குலமங்கலம் பிரதானச் சாலையை அடை வதற்கு மாநகராட்சி நிர்வாகம் ஹெலி காப்டர் இயக்கினால் நல்லது என்று மக்கள் குமுறுகின்றனர். சாந்திநகர் பேருந்து நிலையத்திலிருந்து மாநகராட்சி எல்லை நிறைவடையும் சங்கீத் நகர் வரையிலான பிரதான சாலையில் ஏற்கனவே ஒரு புறத்தில் பாதாளச் சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டது. தோண்டப்பட்ட இடங்களில் எல்லாம் சாலை கள் பள்ளங்களாக காட்சியளிக்கின்றன. போதாக்குறைக்கு இந்தச் சாலையின் மற்றொரு புறத்திலும் சனிக்கிழமை பாதாளச்சாக்கடைப் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தச் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பது மட்டும் உறுதி. மகாத்மாகாந்திநகர்-விஸ்வநாதபுரம் பகுதி மக்கள் அனுபவிக்கும் கொடுமை கள் ஏராளம். இரவு நேரங்களில் முதிய வர்கள், குழந்தைகள் தவறி விழுந்தால் அரசு இராஜாஜி மருத்துவமனையின் எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவிற்குத் தான் செல்ல வேண்டும். விஸ்வநாதபுரம் பகு தியில் வசிக்கும் ஒருவர் பாதாளசாக்கடை க்கு தோண்டப்பட்ட நிலையில் தனது காரை வீட்டிலிருந்து வெளியே எடுப்பதற்கு ரூ. 6 ஆயிரம் செலவழித்துள்ளார்.

சேறும்-சகதியுமாக சாலைகள் 

பாதாளச்சாக்கடை பணியால் மக்கள் படும் அவதிகள் சொல்லிமாளாது என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம். வியாழக்கிழமை இரவு மதுரையில் பரவ லாக மழை பெய்த நிலையில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் பகுதிகளில் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு சேறும்-சகதியுமாக, குண்டும்-குழியுமாக சாலைகள் உள்ளன.  விரிவாக்கப் பகுதிகளில உள்ள “நகர்களுக்குள்” செல்லவே முடியாது என்றார். நமது செய்தியாளரிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், மழை பெய்யத் தொடங்கி விட்டது. மதுரை நகரின் சாலைகள் பற்றிக் கூறு வேண்டிய அவசியமில்லை. பாதாளச்சாக்கடைப் பணியும் சேர்ந்துள்ள தால் விரிவாக்கப்பகுதிகள் எப்படியி ருக்கும்... மழை தொடர்ந்தால் என்னவாகும் என்பதெல்லாம் அதிகாரிகளுக்கு தெரியாத விஷயமல்ல. பாதாளச்சாக்கடை பணிகளால் நிம்மதியிழந்து தவிக்கும் குடியிரூப்பு மக்க ளையும், குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து விரை வில் மூன்று இடங்களில் ஆர்ப்பாட்டம், மறியல் நடத்தப்போகிறோம் என்றார். இதற்கிடையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, “பாதாள சாக்கடைப் பணியை விரைந்து முடித்து, உயிரிழப்பையும், விபத்தையும் தடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. “போராடத் தூண்டாதே” என்ற எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. மக்கள் வீதிக்கு போராட வரும் முன்பே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. செய்யுமா?