districts

பருப்பு வகைகளின் தொடர் விலை உயர்வால் பாதிப்பு

விருதுநகர், ஜூன் 10- விருதுநகர் சந்தையில் பருப்பு வகை களின் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் பொது மக்கள் பெரும் பாதிப்ப டைந்து வருகின்றனர். மேலும், ஒன்றிய, மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வரு கிறது. அதன் விபரம் வருமாறு: கடலை எண்ணெய் கடந்த வாரம் 15 கிலோ ரூ.3ஆயிரம் என விற்கப்பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.30 வரை உயர்த்தப்பட்டு தற்போது ரூ.3030க்கு விற்கப்படுகிறது. முண்டு வத்தல் 100 கிலோ கடந்த வாரம்  ரூ.13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை விற்  கப்பட்டது. இந்த வாரம் திடீரென அதன் ஆரம்ப கட்ட விலை ரூ.2 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது. இதனால், குவிண்டால் ஒன்று ரூ.15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

துவரம் பருப்பு 100 கிலோ நயம் புதுஸ்  லயன் வகையானது கடந்த வாரம் ரூ.14 ஆயி ரத்திற்கு விற்கப்பட்டது. ஒரே வாரத்தில் மூட்டை ஒன்றுக்கு ரூ.500 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.14500க்கு விற்பனையாகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகை  100 கிலோ கடந்த வாரம் 11,500 ரூபாய்க்கு  விற்பனையானது. இந்த வாரம் குவிண் டால் ஒன்றுக்கு ரூ.100 உயர்த்தப்பட்டு தற்  போது ரூ.11600க்கு விற்கப்படுகிறது.  இதேபோல் லயன் உளுந்து வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.8500க்கு விற்பனை  செய்யப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.600 வரை உயர்ந்து தற்போது  ரூ.9100க்கு விற்பனையாகிறது. தொலி உளுந்தம் பருப்பு கடந்த வாரம்  100 கிலோ ரூ.9800க்கு விற்பனை செய்யப்  பட்டது .இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு 200 வரை உயர்த்தப்பட்டு ரூ.10 ஆயி ரத்திற்கு விற்கப்பட்டு வருகிறது. வெள்ளை பட்டாணி பருப்பு இந்தியா புதுஸ் வகையானது கடந்த வாரம் 100 கிலோ ரூ.6 ஆயிரத்திற்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் குவிண்டால் ஒன் றுக்கு ரூ.200 உயர்த்தப்பட்டு ரூ.6200க்கு விற்பனை செய்யப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம்  ரூ.10,500க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைந்து ரூ.10300க்கு விற்பனையாகிறது. 15 கிலோ பாமாயில் விலையானது கடந்த வாரம் ரூ.1400க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.50 குறைந்து தற்போது ரூ.1350க்கு விற்கப்படுகிறது. அதேவேளை, பிற அத்தியாவசிய உண வுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

நியாய விலைக் கடைகளில் வழங்க கோரிக்கை

தொடர்ந்து பருப்பு வகைகளின் விலை  உயர்ந்து கொண்டே செல்வதால் பொது  மக்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து  வருகின்றனர். பெரும் தனியார் நிறுவ னங்கள், பருப்பு வகைகளை அதிக அள வில் குடோன்களில் இருப்பு வைப்பதை தடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  உடனடியாக, உருட்டு உளுந்தம் பருப்பு, தொலி உளுந்தம் பருப்பு, பட்டாணி பருப்பு மற்றும் பாசிப் பருப்பு ஆகியவற்றை  குறைவான விலைகளில் நியாய விலைக் கடைகளில் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.