districts

நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்த பெட்ரோல் நிலையத்தை பொது மக்கள் முற்றுகை

விருதுநகர், ஜூன் 13- விருதுநகர் அருகே உள்ளது சத்திரரெட்டியபட்டி விலக்கு. இங்கு தனி யாருக்கு சொந்தமாக பெட்ரோல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலை யில், இந்நிறுவனத்தினர் நீர்வரத்து ஓடையை மறித்துள்ளதால், கண் மாய்க்கு மழை நீர் வருவது தடுக்கப்படும் எனவும், உடனே மறிக்கப்பட்ட பகுதி யை அகற்ற வேண்டுமென வலியுறுத்தியும் சத்திரரெட்டியபட்டி கிராம மக்  கள் பெட்ரோல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். நீர்வரத்து பாதை சரி செய்யப்படும் என உறுதி யளித்ததன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.