மதுரை, மே 10- மதுரை மாநகராட்சி 1 ஆவது வார்டு கரிசல்குளம், பாண்டிய நகர், திருமால் நகர் ஆகிய பகுதிகளில் பாதாள சாக்க டைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரி யாக மூடப்படவில்ல. இதனால் அந்த பள் ளங்களில் மழைநீர் தேங்கி சாலைகள் முழு வதும் சேரும் சகதியுமாக பொதுமக்கள் நடக்கமுடியாத அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கூறுகையில், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக மழை பெய்து வரு கிறது. இதனால் இப்பகுதிகளில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாததால் அதில் மழை நீர் தேங்கி மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் முழு வதும் சேரும் சகதியுமாக உள்ளது. இரவு நேரங்களில் தெரு விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரு சக்கர வாக னத்தில் வருபவர்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். இப்பகுதியில் உள்ள மாநக ராட்சி அதிகாரிகளிடம் கூறினால் அவர்கள் யாரும் இதை கண்டு கொள்வதில்லை. அதிகாலையில் பணிக்கு செல்பவர்கள் கூட சரியான நேரத்தில் செல்லமுடிவதில்லை. எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் உட னடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.