districts

img

பொங்கலுக்கு தயாராகும் பனங்கிழங்கு

தூத்துக்குடி, ஜன.8- தைப்பொங்கலுக்கு சில நாட்களே உள்ள நிலை யில் பொதுமக்கள் , விவசாயி கள் என அனைவரும் அதை கொண்டாடுவதற்கு தயா ராகி வருகின்றனர். தூத்துக்  குடி மாவட்டத்தில் மானா வாரி விவசாயம் பிரதான மாக நடைபெற்று வருகி றது. பயிறுவகைகள், சிறு தானியங்கள், பணப் பயிர் கள், எண்னை வித்துக்கள் என பயிரிட்டு உள்ளனர். அவை  தற்போது கதிர் பிடித்து அறு வடைக்கு தயாராகி வரு கிறது.  விளாத்திகுளம், திருச் செந்தூர், கோவில்பட்டி, ஒட்  டப்பிடாரம் உள்ளிட்ட பகுதி களில் லட்சக்கணக்கான பனைமரங்கள் உள்ளன. இதனை நம்பி ஆயிரக்க ணக்கான குடும்பங்கள் உள்  ளன. இதன் பதநீர் காலம் மாசி மாதம் முதல் ஆடிமாதம்  வரையாகும். நுங்கு அதன் பின் பழமாகிறது. உதிர்ந்த பனம்பழ  விதைகளை நிலத்  திற்கடியில் தோண்டி புதைத்து மண்ணால் மூடிவிடுவார் கள். மழைக்காலத்தில் முளைத்து கிழங்காக உரு வெடுக்கும். தைப்பொங்க லுக்கு பாரம்பரிய உணவுடன் பனங்கிழங்கு இடம்பெறு கிறது. தற்போது பொங்க லுக்கு விற்பனை செய்ய பனங்கிழங்கு தயாராகி வரு கிறது.  கடந்த வருடம் 25 கிழங்கு  ரூ.80 முதல் ரூ.100-க்கு விற்  பனை செய்யப்பட்டது. நல்ல சுவையாக இருப்பதால் பொதுமக்கள் அதிகம் வாங்கி  செல்கின்றனர். தைப்பொங் கலை முன்னிட்டு தற்போது பொதுமக்கள் பனங்கிழங்கு களை அதிகளவில் வாங்கி செல்வதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.