districts

img

திருவில்லிபுத்தூரில் சிபிஎம் சார்பில் மக்கள் ஒற்றுமை பாதுகாப்பு மாநாடு

திருவில்லிபுத்தூர், அக்.1- மதவெறியை எதிர்ப்போம், மதநல்லிணக்கம் காப்போம் என்ற பெயரில் மக்கள் ஒற்றுமை  பாதுகாப்பு மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  திருவில்லிபுத்தூரில் நடைபெற்றது.  வடக்கு ரத வீதியில் நடை பெற்ற மாநாட்டிற்கு கட்சியின் நகர செயலாளர் வி. ஜெயக்குமார் தலைமை தாங்கினார் .நகர்க்குழு உறுப்பினர் ஏ. மரிய டேவிட்  வர வேற்றார். அரசியல் தலைமைக்  குழு உறுப்பினர் ஜி. ராமகிருண் ணன் சிறப்புரையாற்றினார்.  மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகம்மது, மாவட்ட செய லாளர் கே அர்ஜுனன், மாநி லக்குழு உறுப்பினர் எம்.. மகா லட்சுமி, திமுக நகரச் செயலாளர் அய்யாவு பாண்டியன் சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி, காங்கிரஸ் நகரத் தலைவர் ப.சி. ராஜா, வி.சி க. வன்னியராஜ் மதிமுக நகரச் செயலாளர் கவுன்சிலர் முரளி விடு தலைச் சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் மைக்கேல் ராஜ் இந்திய தேசிய லிக் கட்சியின் நிர்வாகி சையது இப்ராஹிம் இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் நகர செயலாளர் ஷாஜகான், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ.குருசாமி கே.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம். திருமலை சி. ஜோதிலட்சுமி ஒன்றிய செயலாளர் சசிகுமார் நகர்குழு உறுப்பினர்கள் பிரபு ,ரேணுகா தேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .