மதுரை, அக்.13- மதுரை மாநகராட்சி 63 ஆவது வார்டு பாத்திமா நகர் ஏ. வி.பி.ஆசை தம்பி தெரு வில் 200-க்கும் மேற்பட்ட வீடு கள் உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பெய்த மழையால் பாதாளச் சாக் கடையில் மழைநீர் செல்ல முடியாமல் தெருப்பகுதி முழுவதும் கழிவு நீரும் மழை நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். பெத்தானியாபுரம் பைபாஸ் சாலையில் தேங் கிக்கிடக்கும் கழிவுநீர் கலந்த மழைநீரை அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பகுதி மக்கள் இரண்டு தினங்களுக்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இத னைத்தொடர்ந்து புதனன்று மாநகராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டில் ஊழியர்கள் அப்பகுதியில் பாதாளச் சாக்கடை இணைப்புக்கு அருகில் ஆறு அடி பள் ளத்தை ஜேசிபி இயந்திரம் மூலமாக தோண்டி பாதாள சாக்கடை கழிவுநீரை கிருது மால் நதி வாய்க்காலில் விடு வதற்கான ஏற்பாடுகளை செய்தனர். இதுகுறித்து வடக்கு மண்டல இணை ஆணையா ளர் வரலட்சுமியிடம் கேட்ட போது, நாங்கள் தோண்டச் சொல்லவில்லை. இது குறித்து பேசுவதற்கு மாலை யில் கூட்டம் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது என்றார். வார்டு உதவிப் பொறியா ளர் மல்லிகா கூறுகையில், தோண்டிய பள்ளத்தை மூடச்சொல்லிவிட்டோம் என்றார். ஆனால் பள்ளம் மூடப்படாமல் குழாய் பதிப்ப தற்காக அப்படியே வைத் துள்ளார்கள். ஏற்கனவே கிருதுமால் நதி தூர்வா ரப்படாமல் இப்பகுதி முழு வதும் குப்பைகள் நிறைந்து பெரும் சுகாதாரச்சீர்கேட் டின் பிடியில் சிக்கியுள்ளது. இந்நிலையில் பாதாளச் சாக் கடை கழிவுநீரை வாய்க்கா லுக்கு திருப்பிவிட்டால் மிகப்பெரும் சுகாதாரச்சீர் கேடு ஏற்படும் அபாயம் உள் ளது என்று அப்பகுதியில் உள்ள ஒரு பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.