சிவகங்கை, ஜன.28- சிவகங்கை மாவட்டம் இளை யான்குடி தாலுகா குணப்ப னேந்தல், நாகநாதபுரம் கிராமங்க ளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலா ளர் தண்டியப்பன், ஒன்றிய செயலாளர் ராஜீ ஆகியோர் மக்களை சந்தித்து பல்வேறு பிரச்சனைகளை கேட்டறிந்தனர். இதில், குணப்பனேந்தல் மக்கள் கூறும்போது, குணப்ப னேந்தலில் அரசு புறம்போக்கு இடத்தில் அய்யனார் கோவிலை உள்ளடக்கி 90 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில் என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தை கோவில் தவிர்த்து மீத முள்ள இடத்தை கம்பி வேலியை அகற்றி பொதுப்பயன்பாட்டுக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்தனர். நாகநாதபுரம் ஆதிதிராவிட மக்கள் கூறுகையில், பட்டியலின மக்களுக்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவுக்கான இடம் இதுவரை உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை. இது குறித்து ஆதிதிராவிட நலத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரி வித்தனர்.