சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், இடுபொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.