பீடித் தொழிலாளர் சங்க புதிய கிளை
தென்காசி, ஜுலை 10- தென்காசி மாவட்டம் கடையம் அருகே புலவனூரில் சிஐடியு பீடித் தொழிலாளர் சங்க புதிய கிளை அமைப்பு கூட்டம் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத் தில் மாவட்டபொதுச்செயலாளர் எம்.வேல்முருகன் பேசி னார். தலைவராக ஒ.பூங்கொடி, செயலாளராக வி. பிரிட்டா, பொருளாளராக எஸ்.சத்யா தேர்ந்தெடுக்கப் பட்டனர். கிங்பீடி கம்பெனி நிர்வாகம் 2 ஆண்டுகளாக வழங்காத போனஸ், லீவுசம்பளம் உடனடியாக வழங்கிட தமிழக அரசு, தொழிலாளர் துறை நடவடிக்கை எடுத்திட கோரி ஜூலை 17 ஆம் தேதி பாவூர்சத்திரம் கிங்பீடி கம்பெனி முன்பு முறையீடும் போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.
லாரிகள் மோதி விபத்து: டிரைவர் பலி; கிளீனர் காயம்
தூத்துக்குடி, ஜூலை 10- கோவில்பட்டி அருகே முன்னால் சென்று கொண்டி ருந்த டேங்கர் லாரியின் பின்புறம் லாரி மோதியதில் லாரி டிரைவர் உயிரிழந்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியையடுத்த வடுக பட்டியைச் சேர்ந்தவர் அக்னி மகன் புதுராஜா(53). லாரி ஓட்டுநரான இவர், சனிக்கிழமை மதுரையில் இருந்து சரக்குகளை ஏற்றிக் கொண்டு நாகர்கோவிலுக்கு சென்று கொண்டிருந்தாராம். திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியையடுத்த ஆவல் நத்தம் விலக்கு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் பின்புறம் இந்த லாரி மோதியதாம். இதில் புதுராஜா, லாரி கிளீனர் விருதுநகர் பாத்திமா நகரைச் சேர்ந்த மா.செந்தில் குமார் (52) ஆகிய இரு வரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய போலீஸார் காயமடைந்த இரு வரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் புதுராஜா முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
தூத்துக்குடி ரயில்வே பாலம் அருகில் ரயில்வே போலீசார் சோதனை
தூத்துக்குடி, ஜூலை 10 தூத்துக்குடி மூன்றாவது பாலம் மயில் பாலம் அருகே உள்ள ரயில்வே தண்டவாள பகுதியில் ரயில்வே பாது காப்பு போலீசார் மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை யில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் இருந்து துறை முகம் நோக்கி ரயில் சரக்கு வாகனம் சென்று கொண்டி ருந்தபோது. தூத்துக்குடி 3 வது மைல் பகுதி அருகே உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ஐந்து பாறைகளை வைத்து இருந்துள்ளனர். இதை கவனித்த ரயில்வே ஓட்டுநர் ரயிலை நிறுத்தி கற்களை அப்புறப்படுத்தி யுள்ளார். இது தொடர்பாக மதுரை கோட்ட ரயில் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஞாயிறன்று ரயில்வே பாதுகாப்புத் துறை கோட்ட பாதுகாப்பு ஆணையர் அன்பரசு தலைமை யில், ரயில்வே பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண் ணன், ரயில்வே பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட போலீசார் மோப்ப நாய் ரோவர் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். ரயில்வே தண்டவாளத்தில் கற்களை வைத்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர், சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளதா எனவும் சோதனை மேற்கொண்டனர்.மேலும் அருகில் குடியிருக் கும் திரு.வி.க நகர் பொதுமக்களிடம் விசாரணை மேற் கொண்டு ஆலோசனை வழங்கினார்கள். இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்புத்துறை கோட்ட பாதுகாப்பு ஆணையர் அன்பரசு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சனிக்கிழமை மதியம் இப்பகுதியில் ரயில்வே தண்ட வாளம் அருகே சில பெரிய கற்களை மர்ம நபர்கள் வைத்து சென்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணையும், இப் பகுதி மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள் ளது. வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் இருக்க பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும், ரயில்வே சொத்து பொதுமக்கள் சொத்து. இது போன்ற செயல்களால் ரயில் விபத்து ஏற்பட்டால் அது பொதுமக்க ளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்து கொண்டு பொது மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு கற்கள் அமைப்பது குற்றமாகும். ரயில்வே தண்டனை சட்டம் 150 இல் கீழ் ஜாமின் இன்றி 5 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படும். இதனை மனதில் கொண்டு இளைஞர்கள், பொதுமக்கள் உணர்ந்து செயல் பட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் என்றார்.
முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக புகார்
இராமநாதபுரம், ஜூலை 10- எடப்பாடி பழனிசாமி அதிமுகவிற்கு ஒற்றை தலைமை ஏற்க வலியுறுத்தி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். அப்போது கூட்டத்திற்குள் புகுந்த சிலர் ஓபிஎஸ் வாழ்க என கோஷம் எழுப்பி நாற்காலிகளை தூக்கி எறிந்து ரகளையில் ஈடு பட்டனர். இது தொடர்பாக இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவா ளர்களுக்கு இடையே ஏற்பட்ட தாக்குதலில் அதிமுக இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், கிளை செயலாளர்கள் சந்திரன், மணிபாரதி ஆகியோரின் மண்டை உடைந்தது. கூட்ட அரங்கிற்கு வெளியே நிறுத்தப் பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. காயமடைந் தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு பின் ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடந்தது. கூட்ட அரங்கில் திடீரென நுழைந்து தாக்குதலுக்கு காரணமான முன்னாள் அமைச்சர் மணி கண்டனை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என ஏகமானதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அடியாட்களை அனுப்பி பிரச்சனை உரு வாக்கியதாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட செயலாளர் முனிய சாமி தலைமையில் அதிமுகவினர் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மாற்றுத் திறனாளி மரண நிதி, ஈமச்சடங்கு நிதி: குடும்பத்தினருக்கு வழங்கிட கோரிக்கை
நாகர்கோவில், ஜுலை 10- மரணநிதி, ஈமச்சடங்கு நிதியாக தமிழக அரசு வழங்கும் ரூ.17,000 சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அனைத்துவகை மாற்றத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் தோவாளை வட்டார மாநாடு வலியுறுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டார மாற்றுத்திறனாளிகள் சங்க மாநாடு சனியன்று (ஜுலை 9) தடிக்காரன்கோணத்தில் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் பி.தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.சார்லஸ், செயலாளர் பேராசிரியர் த.மனோ கர ஜஸ்டஸ், நிர்வாகிகள் சி.முருகேசன், அருள், தங்க குமார், ஊராட்சிமன்ற தலைவர் எம்.பிராங்கிளின் உள் ளிட்டோர் பேசினர். வட்டார தலைவராக பி.தமிழ்செல்வன், செயலாள ராக எஸ்.சக்திவேல், பொருளாளராக ஆர்.லிட்டில் பிளவர் மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு அறி வித்துள்ளபடி மாற்றுத்திறனாளியின் பெயர் இடம்பெற் றுள்ள குடும்ப அட்டைகளை ஏஏஒய் முன்னுரிமை பிரி வுக்கு உட்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
குமரியில் பள்ளிவாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை
நாகர்கோவில். ஜூலை 10- கன்னியாகுமரி மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாசல்களில் சிறப்பு கூட்டு தொழு கையுடன் பக்ரித் பண்டிகையானது கொண்டாடப்பட்டது. அழகியமண்டபம், திருவி தாங்கோடு, குளச்சல், நாகர்கோவில், இளங்கடை பகுதிகளில் உள்ள பள்ளி வாசல்களில் குடும்பத்தினர்களுடன் கூட்டு தொழுகை யில் ஈடுபட்டனர். தவ்ஹீத் ஜமாத் சார்பில் அழகியமண்ட பம் அருகே திருவிதாங்கோடு பகுதியில் திரண்ட இஸ்லா மியர்கள் சிறுவர்கள், பெண்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து கூட்டு தொழுகையில் ஈடுபட்ட தோடு ஒருவொருக்கொருவர் ஆரத்தழுவி தியாகத் திரு நாள் வாழ்த்துக் களை பரிமாறி பக்ரித் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
தனியார் கல்லூரி தாளாளர் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
விருதுநகர், ஜூலை 10- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் செவிலியர் கல்லூரி தாளாளார் தாஸ்வின் ஜான்கிரேஸ் (40). இவர் கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவருக்கு பாலி யல் தொந்தரவு அளித்ததுடன், கைப்பேசி மூலம் ஆபாசப் படங்களை அனுப்பினார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார். இந்த வழக்கானது, வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த வன்கொடுமை தடுப்பு நீதி மன்ற நீதிபதி கோபிநாத், தாஸ்வின் ஜான்கிரேசின் நீதி மன்ற காவலை வரும் ஜூலை 22 ம் தேதி வரை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
தேனி உள்ளாட்சி இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
தேனி, ஜூலை 10- தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உள் ளாட்சி இடைத்தேர்தலில் அமைதியான, விறுவிறுப்பான வாக்கு பதிவு நடைபெற்றது. மாவட்டத்தில் வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவி, பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என மொத்தம் 9 பதவி களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த பதவி களுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. வட புதுப்பட்டி, மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், முத்தாலம் பாறை, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சிகளின் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு 10 பேர், சின்ன ஓவுலாபுரம் ஊராட்சி 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர், டி.வாடிப்பட்டி ஊராட்சி 3வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்தி ருந்தனர். இந்த பதவிகளுக்கு 14 வாக்குச்சாவடிகளில் வாக்குச்சீட்டு மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வடபுதுப்பட்டியில் 9,379 பேர், சின்னஓவுலாபுரத்தில் 480 பேர், டி.வாடிப்பட்டியில் 124 பேர் என 9985 வாக்கா ளர்கள் உள்ளனர். சனிக்கிழமையன்று நடைபெற்ற வாக் குப் பதிவில் பொதுமக்கள் ஆர்வமாக வாக்களித்து சென்ற னர். பாதுகாப்பு பணியில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மாலை 5 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 75.42 சதவீதமாக இருந்தது. ஆட்சியர் ஆய்வு பெரியகுளம் ஒன்றியம் டி.வாடிப்பட்டி ஊராட்சியில் நடைபெறும் வாக்கு பதிவு மையத்தை மாவட்ட ஆட்சி யர் க.வீ.முரளீதரன் நேரில் ஆய்வு செய்தார்.
மனுக் கொடுக்கும் இயக்கம்
விருதுநகர், ஜூலை 10- விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக் கொடுக்கும் இயக் கம் நடைபெற்றது. விருதுநகர் அருகே உள்ளது கணபதி நகர் மற்றும் சூலக்கரை பகுதி. இங்குள்ள ஏழை, எளிய மக்கள் பலர் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இலவச குடிமனைப் பட்டா வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு, ஒன்றியகுழு உறுப்பினர் ஜெ.ஜே.சீனிவாசன், எம். ஆறுமுகம், நாகராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரசு மருத்துவமனைகளில் 4308 காலிப்பணியிடங்கள் செப்டம்பரில் நிரப்பப்படும்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி
விருதுநகர், ஜூலை 10- தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் காலியாக உள்ள 1,021 மருத்துவர் பணியிடங்கள் உட்பட 4,308 பணியிடங்கள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் நிரப்பப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளை யத்தில் நடைபெற்ற கொரோனா தடுப் பூசி முகாமை மாநில மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிர மணியன் பார்வையிட்டார். அதன்பின்பு செய்தியாளர்களை சந் தித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் இதுவரை 31 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. நாட்டிலேயே தடுப்பூசி முகம் ஒரு இயக்கமாக நடத்தப்படுவது தமிழகத் தில் தான். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 94.68 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசியும், 85.47 சத விகிதம் பேருக்கு இரண்டாம் தடுப்பூசி யும் செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 94.27 சதவிகிதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 88.78 சதவிகிதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியதில் மாநில அளவிலான விருதுநகர் மாவட் டம் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 313 பேர் பாதிக் கப்பட்டதில், 95 சதவீதம் பேர் வீடுகளி லும், 5 சதவீதம் பேர் மருத்துவமனை யிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனை மாவட்டத் தலைமை மருத்துவ மனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இராஜபாளையம் அரசு மருத்துவ மனை, மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு இணையாக தரம் உயர்த் தப்பட உள்ளது. இதற்கென ரூ.48 கோடி யும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு ரூ.32 கோடியும் நிதி ஒதுக் கப்பட்டு கட்டமைப்பு பணிகள் விரை வில் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் 25 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகா தார மையங்கள் விரைவில் தொடங்கப் பட உள்ளன. அரசு மருத்துவமனைகளில் காலி யாக உள்ள 1,021 மருத்துவர் பணி யிடங்கள் உட்பட 4,308 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப் டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து காலி பணியிடங்களும் நிரப்பப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தென்காசி நாடாளு மன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், தங்கப்பாண்டியன் எம்எல்ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மணல் எடுக்க அனுமதி வழங்கப்படுமா?
அறந்தாங்கி, ஜூலை 10 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா பானாவயல் கிரா மத்தின் வெள்ளாற்றில் ஒரு மாதமாக அரசு அனுமதியுடன் டிப்பர் லாரியிலும், டாரஸ் லாரியிலும் மணல் கொண்டு செல்லப்படுகிறது. அப்படி கொண்டு செல்லப்படும் மணல் புதுக்கோட்டை மாவட்டத்தைவிட தூரமாக இருக்கும் பக்கத்து மாவட்டங்களுக்கு, வாடகை கூடுதலாக கிடைக்கும் என்ற நோக்கத் தோடு வியாபாரம் செய்யப்படுகிறது. மாவட்டத்தின் உள்ளூர் பகுதிகளுக்கு தேவைப்படும் சின்ன சின்ன வேலைகள் மற்றும் ஒன்றிய, மாநில அரசால் கட்டிக் கொடுக்கப்படும் வீடுகளுக்கும், கிராமப்புற குடியிருப்புகளுக்கும் டிப்பர் லாரி போக பாதை இல்லை. எனவே இப்பகுதிகளுக்கும் மணல் கிடைக்க கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதல் பெற்று, டிராக்டரில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கன்னிவாடி பகுதியில் அறுவடைக்கு தயாராகும் வெள்ளைச்சோளம்
சின்னாளபட்டி, ஜூலை 10- கன்னிவாடி பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் வெள்ளைச் சோளப் பயிர்கள் உள்ளன. திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே ராமலிங்கம்பட்டி, மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் விவசாயிகள் நூற்று கணக்கான ஏக்கர்களில் வெள்ளைச்சோளத்தை பயிரிட்டுள்ளனர். தற்போது அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் கிளிகள் மற்றும், குருவிகள், மைனாக்களிடமிருந்து சோளப்பயிரை காப்பாற்ற விவசாயிகள் பல உத்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது அப்பகுதியில் சோளப்பயிர் காற்றுக்கு ஆடும் காட்சி கண்கொள்ளா காட்சியாக உள்ளது.
ரூ.50 லட்சம் கேட்டு திண்டுக்கல் மில் அதிபர் கடத்தல் கடத்தல்காரர்களை பிடிக்க தில்லி சென்றது தனிப்படை
திண்டுக்கல், ஜுலை 10- திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டியில் திரு வல்லிக்கேணி நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் வில்வபதி (வயது 54). இவர் சுக்காம்பட்டி அருகேயுள்ள கொண்டசமுத்திரபட்டியில் ஜெயகிருஷ்ணா ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார். இவர் மில்லுக்கு தேவை யான பஞ்சு மற்றும் நூல்கள் வெளிமாநிலங்களில் இருந்து வாங்குவது வழக்கம். அப்படி வாங்கிய நூல்களை வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி தில்லியில் உள்ள சிவக்குமார் என்ற ஏஜெண்ட்டிடம் அறிமுகமாகி தங்க ளுக்கு 50 டன் நூல் பங்களாதேசுக்கு அனுப்ப வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஒரு கிலோ நூலின் விலை ரூ.205 வீதம் 50 டன்னுக்கு ஒரு கோடியே 25 லட்சம் என்று பேரம் பேசி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வேண்டும் என்று தில்லி ஏஜெண்ட் சிவக்குமார் வில்வபதியை அழைத்துள்ளார். இதனையடுத்து மில் வேலைகளை மேலா ளர் சண்முகவேலிடம் ஒப்படைத்துவிட்டு கடந்த 5 ஆம் தேதி தனது கணக்காளர் வினோத்குமாருடன் மதுரை விமானம் மூலம் தில்லி சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி மில் அதிபர் வில்வபதி தனது மேலாளர் சண்முகவேலை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது பதற்றத்துடன் லோக்கலில் உள்ள லோடுகளை அனுப்பி வைக்க கூறியுள் ளார். இதனையடுத்து மில் அதிபர் வில்வபதி தனது மருமகன் தர்மபிரகாஷ், சம்மந்தி சிவக்குமாரிடமும் செல்போனில் தொடர்பு கொண்ட போது தில்லியில் மர்ம நபர்கள் தன்னை கடத்தி வைத்துக்கொண்டு ரு.50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக வும், மேலாளர் சண்முகவேலிடம் பணத்தை ரெடி பண்ணி கொடுத்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனையடுத்து சண்முகவேல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். நூல் கொள்முதல் செய்வதற்காக மில் உரிமையாளர் வில்வபதியையும், வினோத்குமாரையும் அழைத்துச்சென்று ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டி வருகிறார்கள் என்று சண்முகவேல் புகாரில் கூறி யுள்ளார். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை பிடிப்பதற்காக திண்டுக்கல் தாலுகா ஆய்வாளர் பாலாண்டி, மேற்கு காவல் ஆய்வாளர் ராஜ சேகரன், தாடிக்கொம்பு சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கடத்தல்காரர் களை பிடிப்பதற்காக தில்லி சென்றுள்ளனர். (நநி)
குமரி உள்ளாட்சித்தேர்தலில் 56.62 சதவீத வாக்குப்பதிவு
நாகர்கோவில், ஜூலை 10- கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 30-4-2022 வரை ஏற்பட்ட காலிப்பதவி யிடங்களுக்கு 9-ந் தேதி தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலம் ஊராட்சி ஒன்றியம் 10-வது வார்டு உறுப்பினர், குருந்தங்கோடு ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டு உறுப்பி னர், மருதூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர், கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டு உறுப்பி னர், காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் ஆகிய 5 காலிப் பதவியிடங்களுக்கான இடைத் தேர்தல் சனிக்கிழமை நடந்தது. ஜூலை 9 மாலை 6 மணி வரையில் நடந்த வாக்குப்பதிவில் ராஜாக்கமங்க லம் ஊராட்சி ஒன்றிய 10-வது வார்டில் மொத்தம் உள்ள 4918 வாக்காளர் களில் 2787 வாக்காளர்கள் வாக்க ளித்துள்ளனர். இந்த வார்டின் வாக்குப் பதிவு 56. 67 சதவீதம் ஆகும். குருந் தங்கோடு ஊராட்சி ஒன்றிய 7-வது வார்டில் மொத்தம் உள்ள 5217 வாக்கா ளர்களில் 2809 வாக்காளர்கள் வாக்க ளித்துள்ளனர். இந்த வார்டின் வாக்குப் பதிவு 53.84 சதவீதம் ஆகும். தக்கலை ஊராட்சி ஒன்றியம் மரு தூர்குறிச்சி கிராம ஊராட்சி 5-வது வார்டில் மொத்தம் உள்ள 522 வாக்கா ளர்களில் 287 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 54, 98 ஆகும். திருவட்டார் ஊராட்சி ஒன்றி யம் கண்ணனூர் கிராம ஊராட்சி 4-வது வார்டில் மொத்தம் உள்ள 551 வாக்கா ளர்களில் 406 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வார்டின் வாக்குப்பதிவு சதவீதம் 73. 68 ஆகும். காட்டாத்துறை கிராம ஊராட்சி 5-வது வார்டில் மொத்தம் உள்ள 855 வாக்காளர்களில் 541 பேர் வாக்களித்துள்ளனர். இந்த வார்டின் வாக்குப்பதிவு சதவீதம் 63. 27 ஆகும். ஊராட்சி ஒன்றிய வார்டுகளில் 53. 84 சதவீத வாக்குகளும், கிராம ஊராட்சி வார்டுகளில் 67. 35 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மொத்தம் உள்ள 12,063 வாக்காளர்களில் 6830 பேர் வாக்களித்துள்ளனர். வாக்குப்பதிவு சத வீதம் 56.62 ஆகும்.