districts

img

பட்டா வழங்கும் முகாம்

சின்னாளபட்டி, டிச.29- திண்டுக்கல் மாவட்டம் நிலக் கோட்டை தாலுகா கொடைரோடு அருகே ஜம்புதுரைகோட்டை மற்றும் ஒருத்தட்டு வருவாய் கிராம பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமை யாளர்களுக்கு நீண்ட நாட்களாக தங்கள் பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களின் குறைகளை களைய மனு செய்திருந்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு உடனடியாக பட்டா  மாறுதல், திருத்தம், புதிய பட்டா உட்பட வழங்கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர் .இதற்கான ஏற் பாட்டை ஜம்புதுரை கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பவுன்தாய் காட்டுராஜா ஏற்பாடு செய்திருந்தார்.