districts

img

தனியார் சிமெண்ட் ஆலைக்கு வரும் லாரிகளில் இருந்து சுண்ணாம்புத் தூள் பறக்கக் கூடாது

விருதுநகர், நவ.2- விருதுநகர் அருகே உள்ள  ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு  வரும் லாரிகளில் இருந்து சுண்  ணாம்புத் தூள் பறப்பதால் பொது மக்கள் பாதித்து வருகின்றனர். இனி இதுபோல் நடக்கக் கூடாது என சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த சட்டப் பேரவை உறுதி மொழிக் குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. இதை யடுத்து, மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது.  பின்னர் செய்தியாளர்களிடம் குழுத் தலைவர் வேல்முருகன் கூறு கையில், ‘‘விருதுநகர் மாவட்டத் தில் ரூ.27.85 கோடியில் நடை பெறும் பாதாள சாக்கடைத் திட்டப்  பணிகள் குறித்தும், ரூ.444 கோடி யில் நடைபெற்று இறுதிக்கட் டத்தை அடைந்து வரும் கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளையும், சாத்தூ ரில் ரூ.2.63 கோடியில் கட்டப்பட்டு வரும் சுற்றுலா மாளிகையும் பார் வையிட்டோம். மேலும், விருதுநகர் அருகே  உள்ள ராம்கோ சிமெண்ட் ஆலைக்கு சுண்ணாம்புத் தூள் ஏற்றிக் கொண்டு ஏராளமான கன ரக வாகனங்கள் நாள்தோறும் செல்  கிறது. அப்போது, சுண்ணாம்புத் தூள் பறப்பதால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு நுரை யீரல் பாதிப்பு, சுவாசக் கோளாறு,  கண் எரிச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் வந்தது.  எனவே, அந்த ஆலையை சோதனை மேற்கொண்டோம். அதில் புகார்கள் உண்மை எனத்  தெரியவந்தது. எனவே, இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்க மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர், வட்டாரப் போக்கு வரத்து அலுவலர், மாசு கட்டுப் பாட்டு வாரிய அலுவலர் ஆகி யோர் அடங்கிய குழு ஆய்வு செய்து  நடவடிக்கை எடுக்க உத்தரவிட் டுள்ளோம். இங்குள்ள இ.எஸ்.ஐ மருத்து வமனையில் 100 படுக்கைகள் கொண்டதாக மாற்ற பல ஆண்டு களுக்கு முன்பே உத்தரவு வந்  துள்ளது. ஆனால், நடைமுறைப் படுத்தப்படவில்லை. குறிப்பாக,  படுக்கை வசதி செய்யப்பட வில்லை. மேலும் போதுமான  மருத்துவர்கள், செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட வில்லை. எனவே, இஎஸ்ஐ இயக்கு நருக்கு சம்மன் அனுப்பி அவரை  ஆஜராக வேண்டுமென தெரிவித் துள்ளோம். பிரசவ அறைகளில் 3 நாட்க ளுக்குள் கொசுவலைகள் பொருத்த வேண்டும் எனவும், கழிவறைகளில் உள்ள கதவுகளை சீரமைக்க வேண்டுமெனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம்’’ என்றார். மேலும், விருதுநகர் புதிய  பேருந்து நிலையம் 30 ஆண்டு களுக்கு மேலாக செயல்படாமல் உள்ளதே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஆட்சியர் மினி பேருந்து மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், அரசு  அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதி நிதிகளிடம் கருத்து கேட்டுள்ளோம். நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி னார். ஆணைக்குட்டம் அணையை சீரமைக்க ரூ.18 கோடி ஒதுக்கப்  பட்டுள்ளது. ஆனால், கதவணை களை மாற்றினால் தானே பிரச் சனை தீரும் என்ற கேள்விக்கு? இதுபற்றிய புகார் முன் கூட்டியே வந்திருந்தால் அணையை ஆய்வு  செய்திருக்கலாம் என வேல்முரு கன் தெரிவித்தார். இச்சந்திப்பின் போது சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜி.அசோ கன் (சிவகாசி), ரகுராமன் (சாத் தூர்) ஆகியோர் உடனிருந்தனர்.