பழனி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.4.14 கோடி
பழனி, ஜூன் 14- பழனி மலைக்கோயில் உண்டியல்கள் 21 நாட்களில் நிறைந்ததால் கடந்த இரு நாட்களாக திறக்கப்பட்டு எண் ணப்பட்டது. இதில் பக்தர்களின் மொத்த காணிக்கை வரவு ரொக்கம் ரூ.4 கோடியே 14 இலட்சத்து 12 ஆயிரத்து 524 கிடைத்துள்ளது. தங்கம் 1,330 கிராமும், வெள்ளி 16,832 கிராமும், பல்வேறு வெளிநாட்டு கரன்சிகள் 465 காணிக்கையாக கிடைத்துள்ளது.எண்ணிக்கையில் கல்லூரி மாணவ மாண வியர்கள், கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர். கோவில் இணைஆணையாளர் மாரிமுத்து தலைமையில் இப்பணி நடபெற்றது.
சாணார்பட்டி அருகே வாலிபரிடம் நகை, செல்போன் பறிப்பு
நத்தம், ஜூன்.14- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி- அஞ்சு குழிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 22). தனியார் மில்லில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது.இவர் நேற்று முன்தினம் இரவு கன்னியாபுரம்-அஞ்சுகுழிபட்டி சாலை யில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் செயின் மற்றும் செல்போனை பறித்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து ஜெயப்பிரகாஷ் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சாணார்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமராக் களின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.