districts

img

நாசாவின் காலண்டர் ஓவியப்போட்டியில் பழனி பள்ளி மாணவியின் ஓவியம் தேர்வு

பழனி, ஜன.20- அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறு வனமான ‘நாசா’ சார்பில், ஆண்டு தோறும் உலக அளவிலான ஓவியப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தேர்வாகும் ஓவியங்கள் ‘நாசா’ சார்பில் வெளியிடப்படும் காலண்டரில் அச்சிடப்படு கிறது. அதன்படி 2023 ஆம் ஆண்டு காலண்டர் ஓவியப்போட்டியை சில மாதங்களுக்கு முன்பு நடத்தியது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து  25 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு ஓவியங்களை வரைந்தனர். இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து 9 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன.  இதில் பழனி ஸ்ரீவித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 6 ஆம் வகுப்பு மாணவி தித்திகாவின் ஓவியம் 10 முதல் 12-வயதுக்கான பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தது. அதை யடுத்து ஓவியத்தை வரைந்த மாணவியை பள்ளி தாளாளர் வீரா எஸ்.டி. சாமிநாதன், இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள் பராட்டினர். நாசாவின் காலண்டர் ஓவியப்போட்டியில் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி மாணவர்களின் ஓவியம் 4-வது முறையாக தேர்வு செய் யப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.