மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள பழமுதிர்ச்சோலை முருகன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெள்ளியன்று நேரில் ஆய்வு செய்தார். கந்தசஷ்டியை முன்னிட்டு ஆலயத்தில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் கோயிலில் பக்தர்களின் வசதி குறித்து ஆய்வு செய்தார். அழகர்கோயில் துணை ஆணையர் ராமசாமி மற்றும் கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.