திண்டுக்கல், ஜுன் 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மாவட்டச் செய லாளராக பி.செல்வராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு கூட்டம் ஞாயிறன்று (ஜுன் 9) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராம லிங்கம், கே.பாலபாரதி, என்.பாண்டி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளராக பி.செல்வ ராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
தேர்தல் வெற்றிக்கு உழைத்த திமுக கூட்டணி தலைவர்கள், தொண்டர்களுக்கு நன்றி
மேலும் இக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: 18வது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமை யிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. திண்டுக்கல் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் 6,70,149 வாக்குகள் பெற்று, 4,43,821 வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். இத்தகைய மகத்தான வெற்றியை அளித்த வாக்காளர் பெருமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மேலும், இந்த மாபெரும் வெற்றிக்காக தேர்தல் களத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளை யும் தொண்டர்களையும் ஒருங் கிணைத்து அயராது உழைத்த திமுக அமைச்சர்கள் ஐ.பெரிய சாமி, அர.சக்கரபாணி, பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில் குமார் ஆகியோருக்கும் இந்தியா கூட்டணி தோழமைக் கட்சி களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து தோழர்களுக்கும் கட்சியின் மாவட்டக்குழு சார்பில் நன்றியை யும், பாராட்டுக்களையும் தெரி வித்துக் கொள்கிறோம். இவ்வாறு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜுன் 15 முதல் ஜூலை 10 வரை தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தை தீவிரமாக நடத்துவது எனவும் மாவட்டக்குழு முடிவுசெய்துள்ளது.