districts

சுரங்கங்களை ட்ரோன்கள் மூலம் கண்காணிக்க உத்தரவு

சென்னை, ஜன. 21 - கோவை மாவட்டம், மதுக்கரையில் உள்ள ஏசிசி சிமெண்ட் தயாரிப்பு  நிறுவனம் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்  செய்திருந்தது. அதில், கனிமவளத்து றை உரிமத்தொகை அதிகம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி யுள்ளதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  எஸ்.எம்.சுப்ரமணியம், பூமியின் கீழ்  உள்ள அனைத்து கனிமங்களும் தேசத்தின்செல்வங்கள். அரசு கேட்டுள்ள உரிமத்தொகையை மனுதாரர் செலுத்த வேண்டும். மனுதாரர் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் மற்றும் அனைத்து இடங்களிலும் ‘ட்ரோன்’ மூலம் அளவீடு செய்ய வேண்டும்  என உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் சுரங்க நடவடிக்கைகள்  மற்றும் சுரங்கங்களை கையாள்ப வர்கள், வெட்டியெடுக்கப்பட்ட கனிமங் களை மதிப்பிடுவதற்கும், வசூலிக்கப் பட வேண்டிய உரிமத் தொகையை நிர்ணயம் செய்வதற்கும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுரங்கங்க ளிலும் ட்ரோன் மூலம் அளவீடுகள் செய்ய வேண்டும் என்றும் உத்தர விட்டார். இந்த உத்தரவுகளை நடை முறைப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக 4 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.