districts

தமிழக கடலோரங்களில் எண்ணெய் கசிவு தடுப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்

மதுரை, ஜன. 6-  கடலோர பகுதிகளுக்கான எண்ணெய் கசிவு தடுப்பு குழுவை தமிழகத்தில் உடனடியாக ஏற்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். இதில், ‘‘கடல் பரப்பில் எண் ணெய் கப்பல்களில் விபத்தோ, கசிவோ ஏற்பட்டால் கடல் பரப்பளவில் அதிகளவிலான தூரத்திற்கு எண் ணெய் படலம் ஏற்படுகிறது. இதனால், கடலின் இயற்கை வளம், மீன் வளம் உள்ளிட்டவை பெரிதும் பாதிக்கின் றன. இது போன்ற விபத்து நேரங்க ளில் உரிய நடவடிக்கை எடுக்கவும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மாநில அளவிலும், மாவட்ட அளவி லும், கடலோர பகுதிகளிலும் உரிய குழு அமைக்க வேண்டுமென தேசிய எண்ணெய் கசிவு தடுப்பு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  இந்தக் குழு குறிப்பிட்ட கால இடை வெளியில் அவ்வப்போது கூடி தேவை யான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆனால், இந்தக் குழு இதுவரை அமைக்கப்படவில்லை. தற்போது, இலங்கை கொழும்பு பகுதியில் ஒரு கப்பல் தீவிபத்தில் சிக்கியுள்ளது. இதி லிருந்து எண்ணெய் மற்றும் ரசாயன திரவங்கள் கடலில் கசிந்துள்ளன. இவை இந்திய கடல் எல்லைப் பகுதி யிலும் பரவியுள்ளது. எனவே, மாநில, மாவட்ட மற்றும் கடலோர பகுதிகளுக்கான எண்ணெய் கசிவு தடுப்பு குழுவை உடனடியாக ஏற்படுத்தவும், கொழும்பு கப்பல் விபத் தின் எண்ணெய் கசிவை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தி யநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது, இதில், கட லில் கப்பல் விபத்துக்குள்ளாகி எண்ணெய் கசிவு ஏற்படும் பொழுது மாநில மற்றும் மாவட்ட அளவிலான பேரிடர் குழு அமைக்கப்பட்டு மாநில அரசின் பேரிடர் மேலாண்மை துறை யின் கீழ் நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டது. இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், கட லோரம் இல்லாத மாநிலங்களில் எண்ணெய் கசிவு மாநில பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட வேண்டிய அவசியமில்லை.  ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனு போதுமானதாக இல்லை. எனவே, கூடுதல் விவரங்களுடன் முழு மையான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தமிழக அரசு தரப்பில் எண்ணெய் கசிவு பேரிடர் தடுப்பு தேசிய செயல் திட்டத்தின் கீழ் தமிழ கத்தில் பேரிடர் மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதா? கூட்டம் நடத் தப்படுகிறதா? என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை 6 வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.