விருதுநகர், ஆக.31- கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற் றும் குழந்தைகள் வந்து செல்லக்கூடிய அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தக் கூடாது என வலியுறுத்தி அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் (சிஐடியு) சங் கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட் டத்திற்கு மாவட்டத் தலை வர் எஸ்தர்ராணி தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பாண்டியம்மாள், மாவட்ட நிர்வாகி இந்து ராணி, சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம். சாராள், ஆர்பாலசுப்பிர மணியன், மாவட்டச் செய லாளர் பி.என்.தேவா உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக் குமார் மற்றும் ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் அனிதா ஆகியோருட்ன் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் கணகாணிப்புக் கேமிரா பொருத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்படுவதாக உறுதியளித்தனர். இதை யடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.