தேனி, ஜூன் 2- வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் போக பாசனத்திற்கு அமைச்சர் கள் ஐ.பெரியசாமி ,பி.மூர்த்தி ஆகி யோர் தலைமையில் தண்ணீர் திறக் கப்பட்டது. தண்ணீர் திறப்பிற்கு பின் செய்தி யாளர்களிடம் கூட்டுறவு அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது , வைகை அணையில் இருந்து சிவ கங்கை, இராமநாதபுரம் மாவட்ட பாச னத்திற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு 2000 கன அடிநீர் திறக்கப்பட் டது. இது படிப்படியாக குறைக்கப் பட்டு புதன்கிழமை முதல் நிறுத்தப் பட்டது. இதன்மூலம் சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களில் பூர்வீக பாசன பகுதி 1 மற்றும் 2-ல் உள்ள கண்மாய்களுக்கு 582 மி.கன அடியும், பகுதி 3-ல் உள்ள கண்மாய் களுக்கு 267 மி.கன அடியும் தண்ணீர் சென்றது. பெரியாறு பிரதான கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இரு போக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்க ளுக்கு வினாடிக்கு 900 கன அடி வீதம், 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும் அடுத்த 75 நாட்களுக்கு முறை வைத் தும் ஆக மொத்தம் 120 நாட்களுக்கு ஜூன் 2 முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனடிப்படை யில், வைகை அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் வாயி லாக திண்டுக்கல் மாவட்டத்தில் 1,797 ஏக்கர் நிலங்களும், மதுரை மாவட்டத்தில் 43,244 ஏக்கர் நிலங்க ளும் என மொத்தம் 45,041 ஏக்கர் நிலங் கள் பாசன வசதி பெறும் என்றார். இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக் குமார் (பெரியகுளம்), ஆ.வெங்க டேசன் (சோழவந்தான்), மு.பூமி நாதன் (மதுரை தெற்கு), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவிண் உமேஷ் டோங்கரே, பெரியாறு வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் எம்.சுகுமார் தேனி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எம்.சக்கரவர்த்தி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எல்.மூக்கையா, லட்சுமணன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.