districts

img

சாத்தூரில் சிபிஎம் தேர்தல் அலுவலகம் திறப்பு

சாத்தூர், பிப்.7- விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சிக்குட்பட்ட 11-வது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடு கிறது. இந்நிலையில், தேர்தல் அலுவலக திறப்பு விழா நடை பெற்றது.  அலுவலகத்தை சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலசுப்ரமணியன் திறந்து வைத்தார். தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர் கே.சுப்பாராஜ், மாவட்ட செயற்குழு எஸ்.லட்சுமி, சிபிஎம் வேட்பாளர்கள் எஸ்.தெய்வானை, கே.விஜயகுமார், நகர செயலாளர் பா.பெத்தராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் மனோஜ் குமார், கிளைச் செய லாளர் சங்கர், சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனி குமார், வட்ட செயலாளர் சாமி நாதன், முத்து, நகர செயலாளர் ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.