சென்னை, ஜூலை 18- தமிழகத்தில் கலை, அறி வியல் கல்லூரி மாண வர்களுக்கு பருவத்தேர்வு மே மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை நடந்தது. பின்னர் ஒரு மாதம் விடுமுறை விடப் பட்டது. முதல், இரண்டாம், மூன்றாம் ஆண்டு மாணவர் கள் பருவத்தேர்வு எழுதி இது நாள்வரையில் விடு முறையில் இருந்தனர். அவர்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி முதல் கல்லூரி கள் திறக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித் தது. அதன்படி அனைத்து கலை, அறிவியல் கல்லூரி களும் திறக்கப்பட்டன. தமிழகத்தில் 163 அரசு, உதவி பெறும் கலை, அறி வியல் கல்லூரிகள் மற்றும் நூற்றுக்கும் மேலான தனி யார் சுயநிதி கலை, அறிவி யல் கல்லூரிகள் திறக்கப் பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பிற்கு சென்றனர். சென்னையில் 20-க்கும் மேற்பட்ட கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வரு கின்றன. அரசு கல்லூரிகள், உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் திறக் கப்பட்டதால் மாணவர்கள் பேருந்து, ரயில் மற்றும் இரு சக்கர வாகனங்களில் சென்ற னர்.