திருவனந்தபுரம், ஜன.20- கோவிட் பரவும் சூழலில், கேரளத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்க ளுக்கு ஜனவரி 21 முதல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட உள் ளன. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜன.21) முதல் ஆன்லைன் வகுப்பு களும் 10,11,12 ஆம் வகுப்பு களுக்கு தற்போதுள்ள நிலை அப்படியே தொடரும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவிய ருக்கு இரண்டு வாரங்களு க்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கான டிஜிட்டல் வசதி கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி யின் அலுவலகங்கள் செயல் படும். ஆனால் நோய் பரவ லின் கிளஸ்டர் உருவானால் பள்ளியை மூட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் கோவிட் கிளஸ்டர்கள் உரு வானால் பள்ளியை மூட ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.