திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் வெங்காய விலை வீழ்ச்சியால் வேதனையடைந்த விவசாயிகள் வெங்காயத்தை சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சக்திவேல், தயாளன், தங்கசாமி, ஆறுமுகம், ராஜீ, தங்கவேல் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஐம்பது பேர் பங்கேற்றனர்.