தென்காசி, டிச.1- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்காசி மாவட்டக் குழு சார்பில் நவம் பர் புரட்சி தின விழா, தீக்க திர் சந்தா வழங்கும் விழா, கட்சி மாநிலக் குழு அலு வலக கட்டிட நிதி வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடை பெற்றது. விழாவிற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் உ. முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். விழா வில் சிஐடியு மாநில துணைத் தலைவர் ஆர்.எஸ். செண்ப கம் நவம்பர் புரட்சி தினம் குறித்து பேசினார். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி சிறப்புரை நிகழ்த்தி னார். நிகழ்வில் கட்சியின் மாநி லக் குழு அலுவலக கட்டிட நிதியாக முதல் தவணை ரூபாய் ஒரு லட்சத்தை மாவட் டச் செயலாளர் உ. முத்துப் பாண்டியன் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கினார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னரும் தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளருமான பி. உச்சிமாகாளி ஆறு மாதம் மற்றும் ஆண்டு சந்தா 101க்கான தொகை ரூபாய் 72 ஆயிரத்தை உ. வாசுகி யிடம் வழங்கினார். விழாவில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஏ. தங்கம், டி. கணபதி பி.அசோக் ராஜ், பி.வேல்மயில், எஸ்.அயூப்கான் மற்றும் கட்சி யின் மாவட்டக் குழு உறுப்பி னர்கள், இடைக் கமிட்டி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆதர வாளர்கள், வெகுஜன அமைப்பு களின் தலைவர்கள் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர்.