மதுரை, ஜூன் 21- மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவானாம் அரு கில் ஊராட்சி ஊழியர்களான ஓஎச்டி ஆப்ரேட்டர் , தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். பணி ஓய்வு பெறும் போது பணிக்கொடை , ஓய்வூ தியம் உடனே வழங்க வேண்டும். ஆப்ரேட்டர்களுக்கு ரூ.1400 ஊதிய உயர்வு அரசாணையை திருத்தம் செய்து வெளியிட வேண்டும். 7 வது ஊதியக்குழு நிலுவை உள்ள 55 மாத அரியர் பணத்தை உடனே வழங்க வேண்டும். தமி ழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊதியத்தை நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகில் திங்களன்று சிஐடியு உள்ளாட்சி சங்க மாநிலக்குழு உறுப்பினர் நல்மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் தங்கவேல்பாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் பொன்.கிருஷ்ணன், மாவட்ட துணைத் தலைவர் செ.ஆஞ்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே. அர விந்தன், மாவட்ட பொருளாளர் ஜி. கௌரி மற்றும் சங்க நிர்வாகிகள் பி. பொன்ராஜ் எம். ஆண்டவர், வி. பூமிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.