districts

img

மன்னவராதி கண்மாயில் மறுகால் கால்வாயில் அடைக்கப்பட்ட பகுதி அகற்றம்

சின்னாளபட்டி,நவ.04- நிலக்கோட்டை அருகே மன்னவராதி கண்மாயில் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு  மறுகால் கால்வாயில் அடைக்கப்பட்ட கரையை பொதுப்பணித்துறையினர் அகற்றினர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்கனமழையால்  கொங்கர்குளம் கண்மாய் நிறைந்து மன்னவராதி கண் மாய்க்கு நீர்வரதது அதி கரித்துள்ளது.  இக்கண்மா யும் ஓரிரு தினங்களில்  நிரம்பி மறுகால் செல்லும் நிலையில் உள்ளது,  இந்நிலையில் சில நபர்கள் கண்மாயில் அதிக நீரை தேக்கும் ஆர்வத்தில் சட்டவிரோதமாக இரவோடு இரவாக ஜேசிபி இயந்திரம் மூலம் கண்மாயின் மறுகால் கால்வாயை அடைத்ததாக கூறப்படுகிறது, ஆனால் மன்னவராதி கண்மாயில் அதிக நீரை தேக்கினால் பல  குடியிருப்புகள்,விவசாயப் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக மன்னவராதி கண்மாய் நீரை மட்டுமே நம்பி கடந்த 20-ஆண்டு களுக்கு மேலாக அக்ரஹ ரப்பட்டி கண்மாய் பாசன விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் நிலக்கோட்டை பொ துப்பணித்துறை அதிகாரிக ளிடம் புகார் அளிக்கப் பட்டது. இதையடுதது நிலக்கோட்டை வட்டாட்சி யர் தனுஷ்கோடி தலைமை யிலான வருவாய்த்துறை அதிகாரிகள், மற்றும் பொ துப்பணித்துறை அதிகாரி கள், நிலக்கோட்டை டிஎஸ்பி  முருகன் உள்ளிட்ட காவல் துறையினர்  நேரடியாக பார்வையிட்டு கால்வாய் பகுதியில்  சட்டவிரோதமாக அடைக்கப்பட்ட பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி அப்புறப்படுத்தினர். 

விவசாயிகள் சங்க முயற்சியால் கண்மாய்கள் நிரம்ப நடவடிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  நிலக்கோட்டை ஒன்றிய தலைவர் பாலசுப்பிர மணியம். ஒன்றியச் செயலா ளர் காசிமாயன்  ஆகி யோர் கூறுகையில்,  நிலக் கோட்டை ஒன்றியம் முழுவ தும் உள்ள கண்மாய்களில் நீர் வரத்து கடந்த காலங்க ளில் இல்லாமல் இருந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுத்து வலி யுறுத்திய தைத்தொடர்ந்து ஆட்சியர் மற்றும் அதிகா ரிகளின் நடவடிக்கையால் மன்னவராதி  கண்மாய் நிரம்பும் நிலைக்கு வந்துள் ளது. நிலக்கோட்டை ஒன்றி யம் முழுவதும் தொடர் மணல் திருட்டு நடந்து வரு கிறது இதனால் நீர்மட்டம் குறைய வாய்ப்புள்ளது. மன்னவராதி கண்மாய் போன்று பல கண்மாய்க ளுக்கு  தொடர்ந்து நீர் வரத்து வருவதை அதிகாரி கள் உறுதி செய்ய வேண் டும். மணல் கொள்ளையர்க ளுக்கு துணை போகாமல் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.