districts

img

போக்குவரத்துக்கு இடையூறான கழிவு நீரேற்று நிலையத்தை இடமாற்ற நடவடிக்கை சிபிஎம் கோரிக்கையால் மதுரை துணை மேயர் உறுதி

மதுரை, மே 14-  மதுரை மாநகராட்சி  63 ஆவது  வார்டு  பெத்தானியாபுரம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக  சாலையின் மையத்தில்  அமைந் துள்ள கழிவு நீரேற்று நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும். அம்மா சிறுவர்கள் பூங்காவை சீர்படுத்தி  பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.  67 ஆவது வார்டு ஜானகி நகர் பகுதியில் செயல்படாமல் உள்ள போர்வெல்லை சரிசெய்து தண்ணீர் பற்றாக்குறையினை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்  டும் என்று வலியுறுத்தி   மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் மேற்கு - 1 ஆம் பகுதிக்குழு  சார்பில் மாநக ராட்சி துணை மேயர் டி. நாகராஜனி டம் கோரிக்கை மனு அளிக்கப்பட் டது.  மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து துணை மேயர் டி. நாக ராஜன் மே 14 சனிக்கிழமையன்று  அதிகாரிகளுடன் வந்து ஆய்வு மேற்  கொண்டார்.  இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன்,  பகு திக்குழு செயலாளர் கு. கணேசன், மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ண மூர்த்தி, சோலை செந்தில் குமார் மற்றும் சிபிஎம், திமுக பகுதி நிர்வா கிகள் உடனிருந்தனர்.  பின்னர் துணை மேயல் நாகராஜன் கூறுகை யில், பொதுமக்கள், போக்குவரத் துக்கு இடையூறாக உள்ள கழிவு நீரேற்று நிலையத்தை இடம் மாற்று வது, பூங்காவை சீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.