districts

தேனி இலகுரக வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் - மறியல்

தேனி, நவ.24- இலகு ரக வாகனம் மற்றும் சரக்கு வாக னங்களுக்கு காவல்துறையினர் அடா வடித்தனமாக அபராதம் விதிப்பதை கண்  டித்து தேனி மாவட்டத்தில் அதன் உரிமை யாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் சாலை விதிமுறைகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கும் சம்  பந்தப்பட்ட வாகனத்திற்கும் திருத்தப்பட்ட அபராதங்களை அரசு அறிவித்து செயல் படுத்தி வருகிறது. அதன்படி சாலை விதி முறைகளை மீறும் வாகனங்களுக்கு ஆன்  லைன் மூலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கூடுதல் அபராதம் விதித்து வரு கின்றனர். இந்த நடைமுறையால் சரக்கு கள் ஏற்றும் வாகனங்கள் கடுமையாக பாதிக்  கப்பட்டு வருவதாக புகார் கூறி வருகின்ற னர். வாகன உரிமையாளர்கள், டிரைவர் கள் கவனத்திற்கு வராமல் ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுவதாகவும், இன்சூரன்ஸ் மற்றும் வாகன புதுப்பித்தல் போது இந்த அபராதங்களை மொத்தமாக செலுத்தும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. சரக்கு வாகனங்க ளில் அதிகப்படியாக சரக்கு ஏற்றிச் செல்வ தாக கூறி அதிகபட்சமாக ரூ.24 ஆயிரம் வரை அபராதம் ஆன்லைன் மூலம் விதிப்ப தாக கூறப்படுகிறது.

ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கும்  நடைமுறையை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் சரக்கு ஆட்டோ உரிமையா ளர்கள் ஒருநாள் வேலை நிறுத்த போராட்  டத்தில் ஈடுபட்டனர். தேனியில் 100 க்கும்  மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்படாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் 300 க்கும் மேற்பட் டோர் காலை முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் இது குறித்து பேச முன்வராத நிலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த  வழியாக வந்த சரக்கு வாகனத்தை சிறை பிடித்தனர். காவல்துறை துணைக் கண்காணிப்பா ளர் பார்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் மாவட்ட வருவாய் அலுவ லர் சுப்ரமணியை சந்தித்து மனு அளித்தனர்.