மதுரை, ஜூன் 17- காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். 40 ஆயிரத்திற்கும் மேலாக காலிப்பணியிடங்கள் உட னடியாக நிரப்பிட வேண் டும் காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சென்னையில் ஜூன் 26 முதல் 29 ஆம் தேதி வரை 72 மணி நேரம் பட்டினி போராட்டம் நடைபெறு கிறது. இந்த போராட்டத்திற் கான ஆயத்த மாநாடு மது ரையில் சனிக்கிழமையன்று மாவட்ட நிர்வாகிகள் பி. அய்யங்காளை பி.ரவி, டி. ஜெயபாக்கியம் வி. தமிழ்ச் செல்வி ஆகியோர் தலைமை யில் நடைபெற்றது. மாவட் டச் செயலாளர் ஆ. அமுதா வரவேற்றார். மாநில துணைத் தலைவர் பி.பேயத்தேவன் துவக்கவுரையாற்றினார், மாவட்டச் செயலாளர்கள் சி.பவானி, டி. பி. தங்கம், வி. மணிக்காளை, எஸ்.முத்து வெள்ளையப்பன் கோரிக் கைகளை விளக்கி பேசி னார். சிஐடியு மாவட்டச் செய லாளர் இரா. லெனின், இந் திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் டேவிட்ராஜதுரை, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் த. செல்வராஜ் உள்ளிட்ட தோழமை சங்க நிர்வாகிகள் ஆதரித்துப் பேசி னர். சங்கத்தின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஜெ.எஸ் விஜயகுமார், மாநிலச் செயலாளர்கள் ஏ. ஜெஸ்ஸி, எஸ். பாண்டி செல்வி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் க.நீதிராஜா நிறைவுரை யாற்றினார். சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டச் செய லாளர், பி. செல்லத்துரை நன்றி கூறினார். மாநாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் கள் கலந்து கொண்டனர்.