விருதுநகர், அக்.3- போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதியில் எண் ணும் எழுத்தும் பயிற்சி மையம் தொடங்கப்பட்ட தைக் கண்டித்து ஆசிரியர் கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 1-ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு எண் ணும் எழுத்தும் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. ஆனால், இப்பயிற்சி களை நகர் அல்லது அதனரு கில் உள்ள பள்ளிகளில் நடத்தாமல், விருதுநகர்-அருப்புக்கோட்டை செல் லும் சாலையில் பேருந்து நிறுத்தமே இல்லாத தனி யார் கல்லூரியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இத னால், ஆசிரியர்கள் அங்கு சென்றுவர பெரும் சிர மத்தை சந்திக்கும் நிலை ஏற் பட்டது. பயிற்சி மையத்தை நகர்ப் பகுதியில் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பயிற்சி வகுப்பைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டாரக் கல்வி அலுவலர் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செய லாளர் ராமமூர்த்தி, விருது நகர் கல்வி மாவட்ட செய லாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் செல்வகணேசன் ஆகியோ ருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பயிற்சி மையத்தை விரு துநகர் நகராட்சிப் பகுதியில் உள்ள ராவ்பகதூர் நகராட்சி உயர் நிலைப் பள்ளி மற்றும் அ.ச.ப.சி.சி நகராட்சி உயர் நிலைப் பள்ளிகளுக்கு மாற்றி உத்தரவிட்டார்.