districts

img

ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களே மதுரை விபத்தில் ஒன்பது பேர் பலியானதற்குக் காரணம்

மதுரை, ஆக.29- ரயில்வேயில் உள்ள காலிப்  பணியிடங்களே மதுரை விபத்தில் ஒன்பது பேர் பலியானதற்குக் கார ணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை புறநகர் மாவட்டக்குழு  சார்பில் மதுரை யா.ஒத்தக்கடை யில் நடைபெற்ற நிதியளிப்புப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியதாவது:- தமிழ்நாட்டில் சில இடங்க ளில் பட்டியலின மக்கள் மீது சாதிய  ரீதியாக தாக்குதல்கள் அதிக ரித்துள்ளது வேதனையளிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு திரு நெல்வேலி மாவட்டம் நாங்குநேரி யில் 11-ம் வகுப்பு பயிலும் பட்டிய லின மாணவர் மற்றும் அவரது சகோதரியை சக மாணவர்களே சாதிய உணர்வுடன் மிகக் கொடூர மாக தாக்கிய சம்பவம் நிகழ்ந் துள்ளது.  2024 நாடாளுமன்றத் தேர்தலை  மனதில் வைத்து பாஜகவினர் வட மாநிலங்கள் மட்டுமல்லாமல் தமிழ்  நாட்டிலும் மத, சாதிய மோதல் களை உருவாக்க முயல்கின்றனர். மோடியின் நண்பர்களான அதானி, அம்பானியின் ரூ.15 லட்சம்  கோடி கடனை ஒன்றிய அரசு தள்ளு படி செய்துள்ளது. ஆனால்,  விவசாயிகளின் கடனைத் தள்ளு படி செய்ய முன்வரவில்லை. 2022-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை  திட்டத்தில் வேலை செய்பவர் களுக்கு வழங்க வேண்டிய சம்பள  பாக்கி ரூ.6,500 கோடியை மோடி அரசு தரவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் நான்கு  பெரிய ரயில் விபத்துகள் நிகழ்ந் துள்ளன. மதுரையில் ஆக.26- ஆம்  தேதி நடைபெற்ற ரயில் தீ விபத்தில்  உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த  ஒன்பது பேர் கருகிப் பலியாகியுள்ள னர். ரயில்வே துறையில் உள்ள  காலிப்பணியிடங்களை நிரப்பா ததே விபத்திற்குக் காரணம். மோடி  அரசு ரயில்வேயை தனியாருக்கு தாரைவார்ப்பதன் விளைவே இது போன்ற விபத்துகளுக்குக் கார ணம்.  சிஏஜி வெளியிட்டுள்ள அறிக் கையின் மூலம், ஒன்றிய பாஜக அர சின் 7.5 லட்சம் கோடி ஊழல் வெளி வந்துள்ளது. ‘இந்தியா’ கூட்டணி  மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக வினருக்கு பயத்தையும் பதற்றத் தையும் ஏற்படுத்தியுள்ளது.  கடும் விலைவாசி, வேலை யின்மை அதிகரிப்பிற்குக் காரண மான ஒன்றிய பாஜக அரசை கண்  டித்து செப்டம்பர் 7-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் நடைபெறும் மறியலில் ஒரு  லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் என்றார்.