நாகர்கோவில், நவ.12- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதி தாக பொறுப்பேற்றுள்ள உதவி மேலா ளர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கிராமப்புற பயிற்சி நிறை வடைந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் கலந்துரையாடல் நிகழ்வு நடை பெற்றது. ஐஓபி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையம் மூலமாக உதவி மேலா ளர்களுக்கு ஐந்து நாட்கள் கிராமப் புற பயிற்சி அளிக்கப்பட்டது. இப் பயிற்சியில் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்குவது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்க ளின் செயல்பாடுகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வங்கிகளுக்கிடை யேயான தொடர்பு, சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள், உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலையங்களின் செயல்பாடுகள், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் செயல்படுகள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை யின் செயல்பாடுகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பு கள் நிறைவடைந்ததை தொடர்ந்து ஆட்சியர், கிராமபுறங்களில் பெற்ற பயிற்சிகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மக்களுக்கு விரைவில் சென்றடைய பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். கிராமப்புற பயிற்சி நிறைவு செய்த உதவி மேலாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து தெரிவித்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி யின் கன்னியாகுமரி மாவட்ட முதன்மை மண்டல மேலாளர் பா.சத்தியநாரா யணன், அலுவலர்களுக்கு வாடிக்கை யாளர் சேவையின் முக்கியத்துவத்தை குறித்தும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களை கிராமப்புற கிளைகளில் பணிபுரி யும்போது விவசாயிகளுக்கு எடுத்து ரைப்பதற்கும் ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வில் கன்னியாகுமாரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கே.எல்.பிரவீன் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்கு நர் ஆன்றோ ஜவஹர், வங்கி அதிகாரி ஹட்சன் இம்மானுவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.